July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

130 பேரின் மரணத்துக்குக் காரணமான பிரான்ஸ் தாக்குதல் தொடர்பான வழங்கு விசாரணை ஆரம்பம்

photo: Twitter/ Préfecture de Police

பிரான்ஸில் 130 பேரின் மரணத்துக்குக் காரணமான 2015 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழங்கு விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட குண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் காரணமாக 130 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் உயிருடன் இருக்கும் ஒரேயொரு சந்தேகநபரான சலா அப்தெஸ்லாமுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது.

சலா அப்தெஸ்லாமுக்கு எதிராக 13 பிரதிவாதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அடுத்த ஒன்பது மாதங்களில் 140 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

330 சட்டத்தரணிகள், தாக்குதலில் உயிர் தப்பிய மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 1800 பேர் மற்றும் 300 சாட்சிகளிடம் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.

சந்தேகநபர் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.