July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேசியா சிறைச்சாலையில் தீ: 40 க்கும் அதிகமானோர் பலி!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள டங்கெராங் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த சிறைச்சாலைக்குள் திடீரென தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர்களில் குறைந்தது 41 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தீ பரவிய ‘சி’ பிரிவு சிறைப் பகுதியில் 122 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த சிறைப் பகுதியில் 40 பேருக்கான இடவசதியே உள்ள நிலையில் அதிகளவான கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த தீவிபத்து சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான பலர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.