![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/E8uUZ1mXMAE3-7i.jpg?fit=680%2C383&ssl=1)
(File Photo)
பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது மூன்று பாகிஸ்தான் துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு கிழக்கே 100 கி.மீ தொலைவில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் மஸ்துங் சாலையில் சோதனை சாவடியில் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து பிரிந்த இந்த குழு, கடந்த மாதம் மீண்டும் தலிபான்களுடன் இணைந்துள்ளது.
மோட்டர் சைக்கிளில் வந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் 6 கிலோ வெடிபொருட்களுடன் வந்த ஒரு தற்கொலை குண்டுதாரி இராணுவ வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரிக்கும் என இஸ்லாமாபாத் அச்சம் வெளியிட்டுள்ளது.