![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/E9uPgzEUYA0ZdJ4-e1630131081791.jpg?fit=743%2C477&ssl=1)
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையம் மீதான இன்னொரு குண்டுத் தாக்குதலை அமெரிக்க படையினர் முறியடித்துள்ளனர்.
அமெரிக்க படையினர் ட்ரோன் தாக்குதல் மூலம் குறித்த தாக்குதலை முறியடித்துள்ளனர்.
தற்கொலை குண்டுதாரி ஒருவரை ஏற்றி வந்த வாகனம் ஒன்றின் மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த வாகனம் மூலமான தற்கொலைத் தாக்குதல் முறியடிக்கப்படாவிட்டால், பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானினில் இருந்து மக்களை மீட்கும் செயற்பாடுகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.