![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/E9uPgzEUYA0ZdJ4-e1630131081791.jpg?fit=743%2C477&ssl=1)
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் மீது தாம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ்- கே பயங்கரவாத அமைப்பின் சூத்திரதாரி கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான நன்கஹார் மாநிலத்தில் உள்ள ஐஎஸ்- கே இலக்குகள் மீது அமெரிக்க படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காபூல் தாக்குதலுக்கு பதிலடி வழங்குவதாக நேற்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.
ஐஎஸ்- கே பயங்கரவாதிகளின் காபூல் இரட்டை குண்டுத் தாக்குதலின் பலி எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.