June 17, 2025 22:58:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் மீது தாம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ்- கே பயங்கரவாத அமைப்பின் சூத்திரதாரி கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான நன்கஹார் மாநிலத்தில் உள்ள ஐஎஸ்- கே இலக்குகள் மீது அமெரிக்க படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காபூல் தாக்குதலுக்கு பதிலடி வழங்குவதாக நேற்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.

ஐஎஸ்- கே பயங்கரவாதிகளின் காபூல் இரட்டை குண்டுத் தாக்குதலின் பலி எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.