July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் நாடு தழுவிய முடக்கம்

கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் நாடு தழுவிய முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் ஓக்லண்ட் நகரில் கொரோனாவுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஜெசின்டா ஏர்டேர்ன் இந்த முடக்கத்தை அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து முழுவதும் மூன்று நாட்களுக்கு முடக்கப்படுவதோடு, ஓக்லண்ட் நகரம் ஏழு நாட்களுக்கு முடக்கப்படுவதாகவும் பிரதமர் ஜெசின்டா அறிவித்துள்ளார்.

ஆறு மாதங்களின் பின்னர் நியூசிலாந்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.