![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/russiaya.jpg?fit=800%2C455&ssl=1)
ரஷ்யா தனது அணுசக்தியில் இயங்கும் குருஸ் ஏவுகணைகளை மீண்டும் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை செய்மதி படங்கள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது
.
ஆர்ட்டிக் வட்டத்தில் உள்ள முன்னர் கைவிடப்பட்ட பகுதியொன்றில் இந்த பரிசோதனையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் ரஷ்யா தனது அணுசக்தியில் இயங்கும் ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு பயன்படுத்திய பன்கோவோ என்ற பகுதியில் மும்முரமான நடவடிக்கைகள் இடம்பெறுவதை செய்மதி படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் சோதனைகளை நடத்துவதை ரஷ்யா 2018 இல் கைவிட்டிருந்தது.
எனினும் புதிய செய்மதி படங்கள் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதை காண்பிக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் காணப்படும் கட்டிடங்களும் செயற்பாடுகளும் ரஷ்யா மீண்டும் தனது குரூஸ் ஏவுகணையை பரிசோதனை செய்வதை ஆரம்பிக்கப்போகின்றது என்பதை புலப்படுத்துகின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.