July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெர்மனியில் கடும் வெள்ளம்: 80 பேர் மரணம் – பலரைக் காணவில்லை!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள அனர்த்தத்தால் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த மாநிலங்களில் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கி இடிந்து விழுந்துள்ளதுடன், அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தும், காணாமல் போயும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில், காவல்துறை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பெருமளவான மக்கள் மீட்புக் குழுவினர் வரும் வரையில் வீட்டுக் கூரைகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரைன்லேண்ட்-பலட்டினேதட் மாநிலத்தின் தலைவர் மாலு ட்ரேயர், இந்த அனர்த்த நிலைமையை பேரழிவு என்று கூறியுள்ளார்.

இதேவேளை அண்டை நாடான பெல்ஜியத்திலும் வெள்ளத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.