October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமா சரணடைந்தார்; 15 மாத சிறைத் தண்டனை ஆரம்பம்

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் உயர் நீதிமன்றம் ஜெகொப் ஸூமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்த தண்டனையை வழங்கி இருந்தது.

ஜெகொப் ஸூமா பொலிஸில் சரணடைய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் அதனைத் தவிர்த்து வந்தார்.

ஜனாதிபதியாக இருந்த போது, ஊழல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு வழங்கப்பட்டிருந்த அரசியலமைப்பு நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்துக்கே, ஸூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஸூமாவின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது.

தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டில், வர்த்தகர்களுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ‘ஆட்சியைக் கைப்பற்றும் சதி’ எனக் குறிப்பிட்டு, விசாரணைகளில் ஆஜராகவும் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஸூமாவின் பதவிக் காலம் முடிந்தவுடன் விசாரணைகள் நடைபெற்று, தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவரது 15 மாத சிறைத் தண்டனை இன்றில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.