July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் தலைநகரில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலி; 50 க்கு அதிகமானோர் காயம்

பங்களாதேஷ் தலைநகரில் இடம்பெற்றவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

டாக்கா நகரின் மொக்பஸார் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் முதலாம் மாடியில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளான 50 க்கு அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் டாக்கா நகர பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெடிப்பு சம்பவத்தால் அருகில் உள்ள 7 கட்டடங்களுக்கும் 3 பஸ் வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் டாக்கா நகர பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.