July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோர்ஜ் ப்லோய்ட் கொலைக் குற்றவாளி சோவினுக்கு 22 வருடங்களுக்கு அதிகமான கால சிறைத் தண்டனை

அமெரிக்க- ஆபிரிக்க சிவில் பிரஜை ஜோர்ஜ் ப்லோய்டைக் கொலை செய்த முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரெக் சோவினுக்கு 22 வருடமும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

48 வயதுடைய ஜோர்ஜ் ப்லோய்ட் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் வீதியில் கொலை செய்யப்பட்டார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரெக் சோவின் ஜோர்ஜ் ப்லோய்டின் கழுத்தை 9 நிமிடங்கள் வரை நெரித்துக்கொண்டு இருந்ததில் இந்த மரணம் ஏற்பட்டது.

“நம்பிக்கைக்குரிய ஒரு பதவியை துஷ்பிரயோகம் செய்து, ப்லோய்ட் மீது வன்முறையைப் பிரயோகித்த குற்றத்துக்காக” 22 வருடங்களும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்.

ஜோர்ஜ் ப்லோய்ட் கொலையுடன் உலக நாடுகளில் இன வெறுப்புக்கு எதிரான கோசம் அதிகரித்தது.

இந்நிலையில், இந்த வழக்குத் தீர்ப்பை ஜோர்ஜ் ப்லோய்ட் குடும்பமும் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர்.