ஹொங்கொங் நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான எப்பல் டெய்லி, இன்று அதன் இறுதி பத்திரிகையை அச்சிடுவதாக அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், கடந்த வாரம் பத்திரிகை நிறுவனத்தை பாதுகாப்பு தரப்பினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
எப்பல் டெய்லி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் உட்பட 5 நிர்வாகிகள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, பத்திரிகைக்குச் சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த பத்திரிகை ஹொங்கொங் மற்றும் சீன அரசாங்கங்களை கடுமையாக விமர்சித்து வந்ததாக தெரியவருகிறது.
ஜனநாயக சார்பு பத்திரிகையான எப்பல் டெய்லியை மூடிவிடுவது, ஊடக சுதந்திரத்துக்கு பலமான அச்சுறுத்தல் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பத்திரிகை அச்சிடுவதை நிறுத்துவதாக முகாமைத்துவம் அறிவித்துள்ளது.