July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தென்னாப்பிரிக்க பெண்!

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது கோசியம் தாமரா சித்தோல் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் கர்ப்ப காலத்தின் பின்னர் குறித்த பெண்ணுக்கு திங்கட் கிழமை இரவு 10 குழந்தைகளும் பிறந்துள்ளன.

இதில் ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கேன் செய்த போது கருப்பையில் எட்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதாக தாம் அறிந்திருந்ததாக குறித்தப் பெண் கூறியுள்ளார்.

10 குழந்தைகளை கண்டு ஆச்சரியப்பட்டதாகக் கூறியுள்ள குழந்தைகளின் தாய் கோசியம் தாமரா சித்தோல், தமக்கு ஆறு வயதில் இரட்டையர்கள் உள்ளனர் எனவும் தாம் எந்த ஒரு கருவுறுதல் சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் மொராக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பெற்றதன் மூலம் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார்.