![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/ளன.jpg?fit=650%2C336&ssl=1)
காசா பகுதியில் 11 நாள் போர் நிறுத்தத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 10 ஆம் திகதியன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையிலான மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலில் 12 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.