May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா இந்தியானாபொலிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி!

அமெரிக்காவின் இந்தியானாபொலிஸ் நகரில் மர்ம நபரொருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

‘பெட்டெக்ஸ்’ வளாகத்தில் குறித்த நபர் தானியங்கி துப்பாக்கி மூலம் கண்மூடித்தனமாக சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தனியொரு ஆளாக இருந்து அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்படும் போது, அந்த இடத்திற்கு பாதுகாப்பு தரப்பினர் விரைந்த போதே அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சர்வதேச விமான நிலையமொன்று உள்ளதால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.