July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் கொலராடோவில் ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம்; பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை மாலை இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடையொன்றில் இருந்த நுகர்வோர் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி எரிக் டொல்லேவும் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொலிஸ் அதிகாரி எரிக் பெரும் சிரத்தை எடுத்ததாகவும், இறுதியில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய நபரும் பொலிஸாரின் பதில் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

https://twitter.com/Atlantide4world/status/1374122599014359042?s=20