சுதந்திரமான,வெளிப்படையான இந்தோ பசுபிக் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான மெய்நிகர் சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ பொருளாதார வல்லமையை அமெரிக்கா எதிர்கொள்வதற்கு அவசியமான இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பைடன் மெய்நிகர் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்கா உங்களுடனும் பிராந்தியத்தின் சகாக்கள், நண்பர்களுடனும் இணைந்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பணியாற்றுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என பைடன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ பசுபிக் உருவாக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கி நான்கு நாடுகளும் வலுவான விதத்தில் முன்னேறவேண்டும் என ஐப்பான் பிரதமர் யொசிகிடே சுகா தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய தலைவர்களும் பிராந்திய பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.