
சுவீடனின் வெட்லன்டா நகரில் இளைஞனொருவன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தீவிரவாத நோக்கம் கொண்டதா என்பதை ஆராய வெட்லன்டா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனே தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் அலறல் சத்தத்துடன் வணிக நிலையமொன்றுக்குள் நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தாக்கப்பட்டவர்களுக்கு அங்கிருந்த பொது மக்கள் முதலுதவிகளை வழங்கியுள்ளனர்.
இதேநேரம், கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, கைதுசெய்துள்ளனர்.