July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நைஜீரியாவில் பாடசாலையொன்றிலிருந்து 300 மாணவிகள் மீண்டும் கடத்தப்பட்டனர்

நைஜீரியாவின் பாடசாலையொன்றிலிருந்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் 300 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர்.

டெங்கபே என்ற நகரில் அரச மகளிர் பாடசாலைக்குள் ஆயுதங்களுடன் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே மாணவிகளை கடத்திச்சென்றுள்ளனர் என ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரச படையினரின் சீருடை போன்று உடையணிந்தவர்கள் மாணவிகளை கட்டாயப்படுத்தி வாகனங்களில் ஏற்றினர் என ஆசிரியை தெரிவித்துள்ளார்.

அவர்கள் பாடசாலை கேட்டினை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அதன் பின்னர் அவர்கள் விடுதிகளிற்குள் நுழைந்து உறங்கிக்கொண்டிருந்த மாணவிகளை உறக்கத்திலிருந்து எழுப்பினார்கள். பிரார்த்தனைக்கான நேரம் என தெரிவித்தே மாணவிகளை எழுப்பினார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை ஓரிடத்தில் நிறுத்தினார்கள். மாணவிகள் அழுதவாறு காணப்பட்டனர். அதன் பின்னர் மாணவிகளை காட்டுக்குள் கொண்டு சென்றனர். அவ்வேளை வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்ததும் பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.