July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துபாய் இளவரசி லத்தீபா வீட்டில் வைத்து பராமரிக்கப்படுகின்றார்; அரச குடும்பம் அறிக்கை

துபாய் இளவரசி லத்தீபாவை வீட்டில் வைத்து பராமரிப்பதாக துபாயின் அரச குடும்பம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகின்றது. உரிய தருணத்தில் அவர் பொதுவாழ்க்கைக்கு திரும்புவார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

லத்தீவா குறித்து ஊடக அறிக்கைகளிற்கு பதில் அளிக்க விரும்புகின்றோம்,அவரது நலன் குறித்து கரிசனை வெளியிட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றியை தெரிவிக்க விரும்புகின்றோம் என குறிப்பிட்டுள்ள அரச குடும்பம், ஊடக செய்திகள் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தவர்களின் ஆதரவுடன் அவர் வீட்டில் வைத்து பராமரிக்கப்படுகின்றார் எனவும் அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, துபாய் ஆட்சியாளரின் மகள் இளவரசி லத்தீபா உயிருடன் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களை ஐக்கிய அரபு இராச்சியம் சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.