July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மியன்மார் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூ சி ”நலமாக உள்ளார்”

மியன்மார் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூ சியின் உடல்நிலைக்கு பாதிப்பு இல்லை என அவரது கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரையும் ஏனைய தலைவர்களையும் ஏற்கனவே தடுத்து வைத்துள்ள இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஆங்சான் சூ சி உட்பட கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரையும் கூடிய விரைவில் விடுதலை செய்யவேண்டும் என அவரது கட்சியின் நிறைவேற்று குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகளை இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள குறித்த கட்சி புதிய நாடாளுமன்ற அமர்வினை கூட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, நைபீடாவில் வைத்து சான் சூ சி கைது செய்யப்பட்டது முதல் இதுவரை தடுத்து வைத்திருக்கும் இடத்தை இராணுவ அதிகாரிகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.