June 12, 2025 12:03:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்’

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய திட்டமிட்டனர் என அமெரிக்க நீதித்துறை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க செனெட்டிற்குள் துணை ஜனாதிபதியின் மேசை மீது ஏறி நின்று கலகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள ஜக்கொப் சான்சிலே என்பவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

அந்த நபரின் வாக்குமூலம் உட்பட ஏனைய ஆதாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்து அவர்களை கொலை செய்வதே வன்முறையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் துணை ஜனாதிபதியின் மேசையில் நீதி வருகின்றது என துண்டொன்றில் எழுதிவைத்துவிட்டு சென்றார் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக அமெரிக்க நீதித்துறை கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.