July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொலைமானி கொல்லப்பட்டு ஒரு வருடம்; ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

ஈரானின் காசிம் சொலைமானி கொல்லப்பட்டு ஒருவருடமாவதை குறிக்கும் விதத்தில் ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் ஈரான் ஆயுத குழுக்களின் ஆதரவாளர்கள் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்தாத்தில் அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பக்தாத்தின் தாஹிர் சதுக்கத்தில் பெருமளவில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈராக் மற்றும் கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஈரானிற்கு ஆதரவான பி.எம்.எவ். என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றியின் தலைவர்களை அமெரிக்கா, இஸ்ரேல் இலக்கு வைத்தமைக்கு எதிராக நாங்கள் இன்று அணிதிரண்டுள்ளோம் என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஈராக்கிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.