July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் பலி

பிரான்ஸில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

48 வயதுடைய நபரொருவர் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

குடும்ப வன்முறைச் சம்பவமொன்றால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை மீட்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீதே, இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய பிரான்ஸின் பீ-தெ-தோம் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.