July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறுவதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம்’

டிரம்ப் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறுவது குறித்து ஈரான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது என ஈரான் ஜனாதிபதி ஹசான் ருகானி தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் ஜனாதிபதியாகியிருப்பது குறித்து ஈரான் மிகுந்த பரவசமடையவில்லை எனினும் டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவது குறித்து ஈரான் மகிழ்ச்சியடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஒரு அயோக்கியன் எனவும் தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி, அமெரிக்காவில் அதிகம் சட்டத்தை மீறியவர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல அட்டுழியங்களில் ஈடுபட்டவர் –பயங்கரவாதி -கொலைகாரர், கொரோனாவிற்கு மருந்தினை பெறும் எங்களின் முயற்சிகளை கூட விடாதவர் டிரம்ப் என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி, இந்த நபர் இவ்வாறே நெறிமுறைகள் மற்றும் மனிதாபிமான கொள்கைகளை மீறியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் முன்னரை விட –வலுவான நிலையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர்,ஈரானின் ஏவுகணை திட்டங்களும் அணுசக்தி திட்டங்களும் முன்னரை விட வலுவான நிலையிலுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.