![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/fii.jpg?fit=1024%2C575&ssl=1)
கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என பெருநம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையாளர் ஸ்டீபன் ஹான் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மருந்து வெளியே செல்வதை பார்க்கின்றோம். மருத்துவபணியாளர்களிற்கும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கும் மருந்துகளை வழங்குவதற்காக காத்திருப்பதாக பத்திரிகைகள் மூலம் அறிகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாளை மருந்து வழங்கப்படும் என பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் மருந்துடன் பைசர் நிறுவனத்திலிருந்து பாரிய டிரக் வாகனங்கள் வெளியேறிக்கொண்டிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
150 பெட்டிகளில் மருந்துகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ள டிரக்குகள் நாளை அமெரிக்காவின் 50 மாநிலங்களை சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
மிச்சிகனில் உள்ள கலாமசுறு தொழிற்சாலையில் முதல்தொகுதி மருந்துகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை அனைத்து மாநிலங்களிலும் உள்ள 145 இடங்களிற்கு மருந்து சென்றடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.