![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/le.jpg?fit=700%2C513&ssl=1)
லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரி உட்பட 21 பேரை 2005 இல் கொலை செய்த குற்றத்திற்காக ஐ.நா.வின் விசேட தீர்ப்பாயம் ஹெஸ்புல்லா அமைப்பை சேர்ந்த சலீம் அயாச்சே என்பவருக்கு அவர் தலைமறைவாக உள்ள நிலையில் ஒரேநேரத்தில் ஐந்து ஆயுள்தண்டனைகளை வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமரை கொலை செய்த குழுவின் முக்கிய நபராக இவர் காணப்பட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2005 இல் லெபனானில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து உருவான கடும் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லெபனானில் 30 வருடங்களாக நிலைகொண்டிருந்த சிரிய படையினர் அங்கிருந்து வெளியேறினர்.
ஹரீரி லெபானில் சிரியாவின் செல்வாக்கை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஐ.நா.வின் தீர்ப்பாய விசாரணைகளின் போது அயாச்சே என்ற ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினருக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான சதிதிட்டத்தில் ஈடுபட்டார்,குண்டுதாக்குதல் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகயில் ஈடுபட்டார்,சர்வதேச கொலையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.