October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சம்; பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

pic: Facebook/moe

பாடசாலைகளுக்கான  2 ஆம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை கருத்தில் கொண்டு, பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், நவம்பர் 9 ஆம் திகதிக்கு மீண்டும் திறப்பதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய்ந்துள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலைகளை திறக்கும் தினத்தை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கத் தீர்மானித்துள்ளனர்.