October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா; 20ஆவது மரணம் பதிவு

கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண்ணொருவர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்றியிருந்தது உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் கொழும்பு- 12 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு நீரிழிவு நோய் காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று 633 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இதுவரையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 4,282 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.