July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

இலங்கைக்கு விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெரும் போக காலத்தில் நெல், சோளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய மரக்கறி உற்பத்திக்கு தேவையான தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சேதன பசளை பாவனையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த பல மாதங்களாக விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்போக பயிர் செய்கைக்கும் மற்றும் மரக்கறி உற்பத்திக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தி அவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.