![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/IMG_20201001_233118.jpg?fit=752%2C460&ssl=1)
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையும், அதன் அருகில் இருந்த களஞ்சியசாலையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்று (01) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதேச மக்களும், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளின் தீயணைப்பு பிரிவினரும், ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரும், எட்டியாந்தோட்டை பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/10/Photo-2.jpg?resize=640%2C352&ssl=1)