June 11, 2025 3:54:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”புர்காவுக்கு தடை விதிக்கும் அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்து இட்டுள்ளேன்”: அமைச்சர் சரத் வீரசேகர

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ‘புர்கா’ அணிவதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மதரசா பாடசாலைகள் இருப்பதாகவும், அவை முறையாக கட்டுப்படுத்தப்படாமையினால் எதிர்காலத்தில் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட அனைத்து பிள்ளைகளும் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.