![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/Mannar-harthal.jpg?fit=800%2C450&ssl=1)
ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.
![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/Mannar-harthal-02.jpg?resize=640%2C360&ssl=1)
அத்துடன் அரச நிறுவனங்களும் வங்கிகளும் வழமைபோன்று இயங்குகின்றன. பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதும், மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெறும் நிலையிலும் சட்டத்தரணிகள் சமூகமளிக்கவில்லை.
மாவட்டத்தின் பல இடங்களில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/Mannar-harthal-03.jpg?resize=640%2C360&ssl=1)