October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரும்பு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இந்திய பிரஜையொருவர் பலி!

இலங்கை,  கம்பஹா மாவட்டத்தில் கொட்டதெனியாவ கரபோட்டுவ பகுதியில் இரும்புத் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த இரும்பு தொழிற்சாலையில், இரும்பை உருக்கும் கொதிகலன் வெடித்ததனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.