July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு பிரதி ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி ஆளுநர்களாக செயற்பட்ட யிவட் பெர்னாண்டோ மற்றும் தம்மிக்க நாணயக்கார ஆகியோரே இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

30 வருடங்களுக்கு மேலாக இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றிய யிவட் பெர்னாண்டோ, இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பு திணைக்களத்தின் பணிப்பாளராகவும் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார்.

அத்துடன், வங்கி மேற்பார்வை, வர்த்தக நிதி, அந்நிய செலாவணி, ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட திணைக்களங்களின் உதவி ஆளுநராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

பிரதி ஆளுநராக புதியதாக நியமனம் பெற்றுள்ள தம்மிக்க நாணயக்கார இலங்கை மத்திய வங்கியில் 27 வருட சேவை அனுபவத்தை கொண்டுள்ளார்.

முன்னதாக, அரச கடன், பிரதேச அபிவிருத்தி, அலுவலக சேவை முகாமைத்துவம் உள்ளிட்ட திணைக்களங்களின் உதவி ஆளுநராக இவர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.