![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/police-2122376_1280-e1606284729284.jpg?fit=1024%2C576&ssl=1)
பெண் உத்தியோகத்தரை தாக்கிய மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாராக கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா, உடுகம்பொலவில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் பணியாற்றும் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண்ணொருவர் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த அதிகாரி பணியிலில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, இந்த விடயம் பாரதூரமென்பதால் மேற்படி பெண் முறைப்பாடு செய்யாமல் கூட பொலிஸார் அந்த பொறியியலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமென தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.