July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, ஹன்தான பகுதியில் வைத்து 28 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதாக தெரிவித்து, சுகாதார சேவை தொடர்பில் போலியான தகவல்கள் குறித்த சந்தேக நபரால் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபரான இளைஞனை கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று  ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, கொரோனா மரணம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட மற்றுமொரு நபர் கடுகன்னாவை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.