October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுக பணிகளுக்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்கத் தீர்மானம்

கொழும்பு

File Photo: Facebook/Sri Lanka Ports Authority

கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைக்குள் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் வகையில், ஓய்வு பெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் தகுதிவாய்ந்த நிறுவனங்களின் சேவையை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வசிப்பவர்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர்.

தற்போதையை கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய சில பணியாளர்கள் கொழும்பு நகரத்தை அண்மித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேங்களில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வது அச்சுறுத்தலான விடயம் என்பதால் ஓய்வு பெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் கூறியுள்ளார்.