May 27, 2025 17:53:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா மரணங்கள் 48 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவரும், மீகொடை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 15,350 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 10,653 பேர் சிகிச்சைகளை நிறைவுசெய்துகொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 4,649 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் நேற்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.