June 15, 2025 12:25:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சத்தில் கைதிகள் ஆர்ப்பாட்டம்

http://https://youtu.be/umw2rwNV0fY

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய கொத்தணிகளாக சிறைச்சாலைகள் மாறிவரும் நிலையில், பழைய போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி இவர்கள்  இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, தமக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கோரியே, இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=umw2rwNV0fY&feature=youtube

இதுவரை வெலிக்கடை, போகம்பர, மாத்தறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் 132 கைதிகள் உட்பட 134 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.