July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா மரணங்கள் 44 ஆக அதிகரிப்பு

கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இன்று கொரோனாவுடன் தொடர்புபட்ட 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய நபரொருவர், கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 11 ஐ வதிவிடமாகக் கொண்ட 40 வயதுடைய ஆணொருவரும், களனியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர் கொவிட்- 19 தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாகவும், அடுத்தவருக்கு கொரோனா தொற்றியிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஐவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.