June 1, 2025 16:32:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 36 ஆவது கொரோனா மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸுக்கு இன்றும் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தானைப் பகுதியைச் சேர்ந்த 84 வயதான வயோதிபப் பெண்ணே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக பதிவாகியுள்ளது.