March 14, 2025 19:50:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் தடைக்கும் காரணம் குரங்கா?

இலங்கை முழுவதும் இன்று பல மணிநேரம் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதே காரணமாக அமைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.