![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-03-at-6.47.29-PM.jpeg?fit=871%2C519&ssl=1)
எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொதுச் செயலாளரும் தொற்றுநோயியல் நிபுணருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
![நிஹால் அபேசிங்கே](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/Capture.jpg?resize=365%2C231&ssl=1)
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வாறான அபாய நிலையொன்று உள்ளமையால் அது தொடர்பில் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் போது, அவரது வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளதாகவும் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.