September 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதித் தேர்தல்: பிரசார நடவடிக்கைகளுக்கு நள்ளிரவுடன் தடை!

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

இதன்படி, இன்று நள்ளிரவுக்கு பின்னர் சட்டவிரோத பிரசாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பின்னரும் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது அல்லது ஊக்குவிப்பது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதாகவும், பிரசாரக் காலம் முடிவடைந்தவுடன், பொதுப் பேரணிகள், விளம்பரப் பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது அனுமதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.