October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டுபாயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

File photo – facebook/slbfe

டுபாயில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய விசேட விமானங்களை அனுப்பி அவர்களை இலங்கைக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக டுபாயில் வதிவிட மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழந்த நிலையில், பலர் அங்குள்ள இலங்கைத் தூதரகங்களின் கீழ் இயங்கும் 150 பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது தாமதிக்காது, அவர்களை நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.