June 2, 2025 19:40:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

ஜனவரி 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றி விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.

மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.