February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி மீது தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் பேரணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இடையில் அவர்களை முன்னே செல்ல விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.