May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம் – யாழ். இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும்!

இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும் – இலங்கையின் யாழ். காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டிணம்- யாழ்.காங்சேன்துறை இடையே இந்த படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.