
இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய தற்போதைய பாராளுமன்றத்தின் 4ஆவது அமர்வை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
அதன்படி, 9 ஆவது பாராளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட அனைத்து பாராளுமன்றக் குழுக்களும் கலைந்துவிடும்.
புதிய கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர் அந்தக் குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.